Sunday, January 26, 2014

அன்னையே...

அன்னையே ...
பத்து மாதம் என்னை இருட்டில் வைத்து
பாடு படுத்தினாய் என்று
கோவமாய் இருந்தேன் உன் மீது.
இப்போதல்லவோ புரிகிறது,
மதிகெட்ட இப்பூமியில் எம்மை விட மனமில்லாமல் தான்
மடியில் நீ சுமந்தாய் என.....

ஒரு தடவ காஷ்மீர் போயிட்டு வாங்க

காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஐ.நா. சபையில் வாக்கு கொடுத்த இந்திய இன்று வரை அதை செய்யாமல், அங்குள்ள மனிதர்களை மனிதர்களாக மதிக்காமல் நடத்திக்கொண்டு, இன்னும் 65வது குடியரசு தினம் கொண்டாட இந்த நாட்டிற்கு என்ன அருகதை இருக்கிறது.... Truly India is not a Secular Country...

பயணம் படத்தில் வரும் ஒரு உரையாடல்..

காஷ்மிரி: இது நாங்க நடத்துற போர், புனித போர்..
பயணி: போர்ல என்ன புனிதம்..
காஷ்மிரி: இருக்கு , அதனாலதான் இங்க இருக்குற பொண்ணுங்கல்லாம் இன்னும் பத்தரமா பாதுகாப்பா இருக்காங்க.. "உங்க ராணுவத்துகிட்டயும், போலிஸ்கிட்டயும் 3 நாள் ஒரு பொண்ணு இருந்தா என்ன ஆகும் விட்டுப்பார், அப்போ தெரியும்.."கம்ப்யூட்டர் படிச்சிட்டு லண்டன் , அமெரிக்கான்னு போறிங்களே , ஒரு தடவ காஷ்மீர் போயிட்டு வாங்க உங்க அரசாங்கம் அங்க என்ன பண்ணிட்டு இருக்குன்னு அப்போ தெரியும்""...# உண்மை சுடும்....

மதமும், மனிதர்களும்

ஒரு சில இந்துக்கள் , முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள், அறியாமையால் செய்யும் தவறுகளுக்காக, மொத்தமாக அந்த மதத்தையோ அந்த மதத்தை சார்ந்த அனைவரின் மீதோ காழ்ப்புணர்வு கொள்வது தவறு... பல சச்சரவுகள் இதனால் தான் விளைகிறது... மதத்தை படியுங்கள் அம்மதத்தை சார்ந்த மனிதர்களை படிக்காதீர்கள்.... நான் தவறு செய்தால் அதை என்னுடைய குணங்களுடனும் , அறியாமையுடனும் தான் தொடர்பு படுத்த வேண்டுமே தவிர என்னுடைய மதத்தின் மீது அல்ல...