Saturday, February 13, 2016

நான் கண்ட மும்பை...

கேட்வே ஆப் இந்தியா, தாஜ் ஹோட்டல், மெரைன் ட்ரைவ், கடற்கரை, இன்னும் இது போன்ற வசீகர சுற்றுலாத்தளங்கள் இல்லாமல் இது மும்பையின் மற்றொரு முகம்.
ஆண்டாண்டு காலமாய் எளிய மனிதர்களின் வியர்வையினால் உருவான நகரத்தில் அவர்களை அவர்களின் விளிம்புநிலையிலேயே இருக்க வைத்து மேல்தட்டு மக்களுக்கான நகரம் மட்டும் உருவாகிறது. இதற்கு மும்பையும் விதிவிலக்கல்ல.
இது நான் கண்ட மும்பை...
15 வருடங்களுக்கு முன்பு சென்று வந்த என் தந்தை நான் மும்பை கிளம்புவதற்கு முன் சொன்னார் “ரயிலில் பார்த்து போ, பாக்கெட் பாத்திரம், அதிகமான கூட்டம் வரும், பப்ளிக் டாய்லெட் தான், வேண்டுமென்றே முகவரி மாற்றி சொல்வார்கள், இன்னும் இத்தியாதிகள்” அம்மா சொன்னார் “15 வருஷம் முன்னாடி நீங்க போனிங்க இப்போ எவ்வளவோ மாறியிருக்கும்” என்று.
15 வருடத்தில் வானுயர்ந்த Navi Mumbai கட்டிடங்களையும், மெட்ரோ, மோனோ ரயில்கள், மால்களையும் தவிர விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிய மற்ற எதுவுமே மாறியிருக்கவில்லை. மனிதம் செத்தால் தான் மாநகரம் உருவாக முடியும் போல. சென்னை எனக்கு அவ்வளவாக பிடிக்காது , இரைச்சல் , புன்சிரிப்பு கூட இல்லாத முறைத்த முகங்கள் இன்னும் பல. வன்புணரப்பட்ட சென்னையாக இருக்கிறது மும்பை. நகர வாசனை அறியாத இயற்கை விரும்பியின் எகத்தாள எழுத்து என்று உங்களுக்கு எண்ணம் ஏற்படலாம்.