Wednesday, July 18, 2018

பூமியும் மெதுவாய் சுற்றுதடி

பூமியும் மெதுவாய் சுற்றுதடி
ஈருடல் ஓருடல் ஆனதடி
இமயமும் சிறுமையாய் தோணுதடி
வீசும் காற்றும் வெக்கம் கொண்டு
வேகமாய் செல்கிறது நம்மை தீண்டி
முகில்களெல்லாம் முனகி திரிகின்றன

கருவறை கதகதப்பும்
கார்முகிலின் ஸ்பரிசமும்
என் மார்புக்கூடுகளில் ஊடுருவி செல்லுதே...

என் மார்புச்சூட்டில் முகம் புதைத்திருக்கும்
என் முழுநிலவே

காதல் என்றால் என்னவென்று தெரிய வேண்டுமா?
இதோ நாம் இறுக அனைத்து நிற்கும்
இந்நொடியில் உன் கண்களில் கசிகிறதே
அதுதான் காதல்

No comments:

Post a Comment