மிக கண்ணியமானவர்களாக கருதப்படும் பெண்களின் இன்றைய நிலை இந்த நவீன உலகில் நாகரீகத்தின் பரிணாமமா அல்லது இழிநிலையின் உச்சமா?
பார்பதற்கு அர்த்தமில்லாத கேள்வியாக தெரிந்தாலும் , நள்ளிரவில் நைட் கிளப் வாசலில் போதையுடன் நிற்கும் பெண்களையும் , ரொம்ப சுலபமாக செக்ஸ்க்கு ஆண்களை அனுமதிக்கும் பெண்களையும் பார்க்கும்போது அப்படி இருந்து இருந்து முடியவில்லை.
ஆதி காலம் தொட்டே பெண்களுடைய உலகம் சுருக்கப்பட்டே தான் இருந்திருக்கிறது. வேட்டையாடிய மனிதன் காலத்திலிருந்து பெண் சமயலறைக்கு பணிக்கப்பட்டே இருந்தாள் என்பதுதான் நிதர்சனம்.என்னதான் ஒளவ்வையார், ஜான்சி ராணி போன்ற பெண்கள் இருந்தாலும், அப்படிப்பட்டவர்கள் சமூகத்தால் தள்ளியே பார்க்கப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.