என் உதிரம்,
கருவாகி
உருவாகி
உயிராகி
உள்ளங்கையில்
தவழ்கிறது...
உலகமாய்...
பொடியன்
04.11.20
ரத்தத்தை விட்டுவிட்டு முத்தத்தை மையப்படுத்தும் பேனாக்களுக்கு மத்தியில் சத்தமாய் சத்தியத்தை சொல்லும் பேனாவுக்கு சொந்தக்காரன்...
15 வருடங்களுக்கு முன்பு சென்று வந்த என் தந்தை நான் மும்பை கிளம்புவதற்கு முன் சொன்னார் “ரயிலில் பார்த்து போ, பாக்கெட் பாத்திரம், அதிகமான கூட்டம் வரும், பப்ளிக் டாய்லெட் தான், வேண்டுமென்றே முகவரி மாற்றி சொல்வார்கள், இன்னும் இத்தியாதிகள்” அம்மா சொன்னார் “15 வருஷம் முன்னாடி நீங்க போனிங்க இப்போ எவ்வளவோ மாறியிருக்கும்” என்று.
ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு சமூகத்துக்கும் தனிப்பட்ட வரலாறுகள் உண்டு, ஒரு நாட்டிற்கு அந்த நாட்டின் வரலாறு மூலம் தான் அந்த நாட்டின் கலாச்சாரங்கள் , வழிதோன்றல்கள், பண்பாடுகளை விளக்க முடியும். ஒவ்வொரு நாடும் தனக்கான வரலாற்று ஆய்வை தொடர்ந்து செய்து கொண்டே வருவதற்கு முக்கிய காரணம் இதுதான். அறிவியல் ஆய்வுகள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு வரலாற்று ஆய்வும் முக்கியம். அறிவியலுக்கு எவ்வாறு கோட்பாடுகள் உள்ளனவோ அதுபோன்றே வரலாற்றுக்கு ஆதாரங்கள் முக்கியம். அனுமானங்கள் மற்றும் நம்பிக்கைகளை என்றுமே வரலாற்றை வடிவமைக்க எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.